/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அருவங்காட்டில் தொடரும் திருட்டு :போலீஸ் கண்காணிப்பு அவசியம்
/
அருவங்காட்டில் தொடரும் திருட்டு :போலீஸ் கண்காணிப்பு அவசியம்
அருவங்காட்டில் தொடரும் திருட்டு :போலீஸ் கண்காணிப்பு அவசியம்
அருவங்காட்டில் தொடரும் திருட்டு :போலீஸ் கண்காணிப்பு அவசியம்
ADDED : பிப் 01, 2024 10:55 PM
குன்னுார்:குன்னுாரில் சாலையோரம் நிறுத்திய பைக் திருடப்பட்டது.
குன்னூர் அருகே அருவங்காடு பஞ்., அலுவலகம் அருகே ஜெகதளா சாலையில், மூர்த்தி என்பவர் பைக் நிறுத்தி வைத்திருந்தார்.
சாவியை மறந்து பைக்கிலேயே விட்டு சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்த போது பைக் திருடி சென்றது தெரிய வந்தது. அருவங்காடு போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
அருவங்காடு பகுதிகளில் யாரும் இல்லாத வீடுகளை உடைத்து திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்த போதும் இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை.
'போலீசார் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கு மட்டும் அதிக அக்கறை எடுக்கும் நிலையில், திருட்டு குற்றங்களை கண்டறிவதற்கு தீவிரம் காட்டுவதில்லை,' என, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இரவு நேரத்தில் ரோந்து பணிகளை அதிகப்படுத்துவதுடன், குற்றவாளிகளை விரைவில் பிடிக்கவும் போலீசார் முன் வரவேண்டும்.

