sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானை: அச்சத்தில் பெற்றோர்

/

சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானை: அச்சத்தில் பெற்றோர்

சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானை: அச்சத்தில் பெற்றோர்

சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானை: அச்சத்தில் பெற்றோர்


ADDED : ஜூன் 21, 2025 06:30 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார், : கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை காட்டு யானை சேதப்படுத்தியதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

கூடலுார் ஹெல்த் கேம்ப், தனியார் எஸ்டேட் பகுதிகளில், இரவில் உலா வரும் காட்டு யானைகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. யானைகள், அவ்வப்போது ஓவேலி சாலைகளிலும் உலா வருகிறது.

நேற்று முன்தினம், அதிகாலை வனச்சோதனை சாவடி அருகே ஓவேலி சாலையில் உலா வந்த காட்டு யானை, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சுற்று சுவரை சேதப்படுத்தி, பள்ளி வளாகத்துக்குள் சென்று, அங்கு பயிரிட்டு இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றது.

அச்சமடைந்துள்ள பெற்றோர் கூறுகையில், 'அரசு பள்ளியை ஒட்டிய சாலை வழியாக இரவில் காட்டு யானைகள் நடந்து சென்றாலும், இதுவரை வளாகத்துக்குள் நுழைந்தது இல்லை.

தற்போது, சுற்றுச்சுவரை சேதப்படுத்தி உள்ளே சென்று வந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us