sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அகழியை சேதப்படுத்தி ஊருக்குள் நுழையும் யானைகள்

/

அகழியை சேதப்படுத்தி ஊருக்குள் நுழையும் யானைகள்

அகழியை சேதப்படுத்தி ஊருக்குள் நுழையும் யானைகள்

அகழியை சேதப்படுத்தி ஊருக்குள் நுழையும் யானைகள்


ADDED : ஜூன் 13, 2025 09:19 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 09:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; 'முதுமலை வன எல்லையில் அமைக்கப்பட்டுள்ள அகழியை, காட்டு யானைகள் சேதப்படுத்தி தொரப்பள்ளி பகுதிக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, கூடலுார், தொரப்பள்ளி பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க முதுமலை வனத்தை ஒட்டி அகழி அமைத்துள்ளனர். பராமரிப்பின்றி கிடந்ததால், காட்டு யானைகள் அகழியை கடந்து தொரப்பள்ளி பகுதிக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. கடந்த ஆண்டு அகழி சீரமைத்து, காட்டு யானைகள் நுழைவதை தடுத்தனர். விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், மீண்டும் சில காட்டு யானைகள் இரவில் குணில் பகுதியில், அகழியை சேதப்படுத்தி அதன் வழியாக, தொரப்பள்ளிக்குள் நுழைந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் விரட்டினாலும், அதன் வருகையை தடுக்க முடியவில்லை. பொதுமக்கள் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், 'முதுமலையிலிருந்து குணில் பகுதிக்கு காட்டு யானைகள் நுழைவதை தடுக்க அகழி அமைத்துள்ளனர்.

சில காட்டு யானைகள் அகழியை சேதப்படுத்தி ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை செய்தப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

அப்பகுதிகளை வனத்துறையினர் சீரமைப்பதுடன், சோலார் மின் வேலி அமைக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us