/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி
/
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : ஊட்டி அருகே, டி. -மணிஹட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் பங்கேற்று பயனாளிகளுக்கு கடன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆதி பராசக்தி, ஸ்ரீ நஞ்சுண்டய்யா மற்றும் கணபதி ஆகிய மூன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா, 20 லட்சம் ரூபாய் வீதம், 60 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சித்ரா, கடன் மேலாளர் ரமேஷ், கள மேற்பார்வையாளர் முருகேசன் மற்றும் ஊர் தலைவர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

