sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரி உருளை, கேரட்டுக்கு புவிசார் குறியீடு; விவசாய சங்கம் வலியுறுத்தல் விவசாய சங்கம் வலியுறுத்தல்

/

நீலகிரி உருளை, கேரட்டுக்கு புவிசார் குறியீடு; விவசாய சங்கம் வலியுறுத்தல் விவசாய சங்கம் வலியுறுத்தல்

நீலகிரி உருளை, கேரட்டுக்கு புவிசார் குறியீடு; விவசாய சங்கம் வலியுறுத்தல் விவசாய சங்கம் வலியுறுத்தல்

நீலகிரி உருளை, கேரட்டுக்கு புவிசார் குறியீடு; விவசாய சங்கம் வலியுறுத்தல் விவசாய சங்கம் வலியுறுத்தல்


ADDED : செப் 09, 2025 09:47 PM

Google News

ADDED : செப் 09, 2025 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; 'நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் உருளைகிழங்கு, கேரட்டுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்,' என, விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம், 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. நீலகிரியில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகள் தரமாகவும் நல்ல ருசியுடனும் இருப்பதால் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அதில், 12 ஆயிரம் ஏக்கரில் உருளை கிழங்கு, 10 ஆயிரம் ஏக்கரில் கேரட் பயிரிடப்படுகிறது.

உருளைகிழங்கு, கேரட் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. 'இந்த இரண்டு காய்கறிகளுக்கு புவிசார் குறியீடு தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி உருளைகிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ரவி கூறுகையில், ''நீலகிரியில் மற்ற மலை காய்கறிகளை காட்டிலும் உருளைகிழங்கு, கேரட் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளவில் நல்ல வேரவேற்பு உள்ளது. கேரட் நாள்தோறும் பல ஆயிரம் டன் சந்தைக்கு அனுப்பப்படுகிறது.

உருளை கிழங்கிற்கு செப்., மாதம் முதல் டிச., மாதம் வரை சீசன் சமயம் என்பதால், அதிகபட்சமாக, 60 லாரிகளின், 100 மூட்டை வீதம் ஒரு மூட்டைக்கு, 80 கிலோ அளவுக்கு சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பிற மாதங்களில், 25 லாரிகளில் அனுப்பப்படுகிறது. இந்த இரண்டு மலை காய்கறிகளுக்கு புவிசார் குறியீடு வேண்டும். என, சங்க பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மாநில அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us