sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊட்டி காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

/

ஊட்டி காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஊட்டி காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஊட்டி காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


ADDED : ஜன 27, 2024 03:16 AM

Google News

ADDED : ஜன 27, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் விதமாக, காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றி பாராட்டும் விதமாக, தலைவர்கள் மற்றும் வீரர்களுக்கு, சிலைகள், நினைவு இல்லங்கள், நினைவு துாண்கள் மற்றும் நினைவு மண்டபங்கள் அமைக்கப்பட்டு அரசின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அந்த பெருமக்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில், தலைவர்களின் தியாகங்கள் மற்றும் பெருமைகளை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், அரசு சார்பில் விழாக்களும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாட்களில் மாவட்ட தலை நகரங்களில் மரியாதை செலுத்தப்படுகிறது.

அதன்படி, ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு, நேற்று கலெக்டர் அருணா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், ஊட்டி ராஜாஜி வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேசப்பற்று பாடல்கள் பாடினர்.

அதில், டி.ஆர்.ஓ., மகராஜ், தாசில்தார் சரவணகுமார், மாவட்ட மத நல்லிணக்க ஒருமைப்பாடு அனுமதி குழு தலைவர் கிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us