/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலையில் வளர்ப்பு யானைகள் அணிவகுப்பில் குடியரசு தினவிழா
/
முதுமலையில் வளர்ப்பு யானைகள் அணிவகுப்பில் குடியரசு தினவிழா
முதுமலையில் வளர்ப்பு யானைகள் அணிவகுப்பில் குடியரசு தினவிழா
முதுமலையில் வளர்ப்பு யானைகள் அணிவகுப்பில் குடியரசு தினவிழா
ADDED : ஜன 27, 2024 01:20 AM

கூடலுார்:முதுமலையில், வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், ஆண்டு தோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில், வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, தேசியக் கொடியேற்றப்படும்.
அதன்படி, தெப்பக்காடு யானைகள் முகாமில் நேற்று குடியரசு தின விழாவில், வளர்ப்பு யானைகள் வரிசையாக அணி வகுத்து நிற்க, அதன்மீது பாகன்கள் தேசியக் கொடியை ஏந்தி அமர்ந்திருந்தனர். யானைகளின் முன், வன ஊழியர்கள் அணிவகுத்து நின்றனர்.
நிகழ்ச்சியில், தெப்பக்காடு யானைகள் முகாம் வனச்சரகர் மேகலா தேசியக் கொடி ஏற்றினார்.
அப்போது, வன ஊழியர்கள் மரியாதை செலுத்த; வளர்ப்பு யானைகளும் தும்பிக்கையை உயர்த்தி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின.
இதனை, அங்கு கூடியிருந்த திரளான சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.
விழாவில், வனச்சரகர்கள் மனோஜ்குமார், விஜயன், வன ஊழியர்கள் யானை பாகன்கள் பங்கேற்றனர்.

