ADDED : ஜூன் 23, 2025 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: வெளியூர் சென்றவர் வீட்டின் பூட்டை உடைத்து, 80 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி, 2 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியத்தை சேர்ந்தவர் அழகர்சாமி, 60; எல்.ஐ.சி., ஏஜென்ட்.
இவரது மனைவி வசந்தி, 55. இருவரும், நேற்று முன்தினம் வெளியூர் சென்றிருந்தனர்.
இந்நிலையில், நேற்று இவரது வீட்டில் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 80 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி, 2 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
அழகர்சாமி புகாரில், பனையப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.