sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

பழுதடைந்த போர்வெல் குழாய் மாலை அணிவித்து அஞ்சலி

/

பழுதடைந்த போர்வெல் குழாய் மாலை அணிவித்து அஞ்சலி

பழுதடைந்த போர்வெல் குழாய் மாலை அணிவித்து அஞ்சலி

பழுதடைந்த போர்வெல் குழாய் மாலை அணிவித்து அஞ்சலி


ADDED : செப் 11, 2025 03:41 AM

Google News

ADDED : செப் 11, 2025 03:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:கறம்பக்குடி அருகே குடிநீர் வராத பழுதடைந்த போர்வெல் குழாய்க்கு, மாலை அணிவித்து பெண்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கே.கே.பட்டியில், அமைக்கப்பட்டுள்ள, இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம், மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆறு மாதங்களுக்கு முன், ஒரு ஆழ்துளை கிணறு மோட்டார் பழுதானது. இதை சரி செய்ய அதிகாரிகளிடம் கூறியதற்கு, உரிய தொகை அரசு வழங்கவில்லை என அலட்சியமாக கூறினார்.

மற்றொரு ஆழ்துளை கிணறு மோட்டாரை வைத்து, இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும் தண்ணீர் ஏற்றி, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது, 15 நாட்களுக்கும் மேலாக, அந்த ஆழ்துளை கிணறு மோட்டார் பழுதானது. அதையும் சரிசெய்யவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, கிராம மக்கள் அவதி அடைந்தனர்.

இதில், ஆத்திரம் அடைந்த கிராமமக்கள், 50-க்கும் மேற்பட்டோர் ஆழ்துளை கிணறு மோட்டார்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, நேற்று பழுதாகி உள்ள ஆழ்துளை கிணறு குழாய்க்கு, மாலை அணிவித்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us