sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

65 ரேஷன் கடைகளுக்கு கருவிழிப்பதிவு கருவி

/

65 ரேஷன் கடைகளுக்கு கருவிழிப்பதிவு கருவி

65 ரேஷன் கடைகளுக்கு கருவிழிப்பதிவு கருவி

65 ரேஷன் கடைகளுக்கு கருவிழிப்பதிவு கருவி


ADDED : ஜூலை 12, 2024 04:13 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் 65 ரேஷன் கடைகளுக்கு கருவிழிப் பதிவு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்த பின் பொருட்கள் வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் ரேஷன் கார்டு தாரர்கள் பலருக்கு கைரேகை பதிவு விழுவதில்லை. அவர்களில் பலர் வட்ட வழங்கல் அலுவலரிடம் சான்று பெற்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வாக இப்போது கருவிழி பதிவு பெறும் வசதி, ரேஷன் கடைகளில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து திருவாடானை வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன் கூறுகையில், திருவாடானை தாலுகாவில் 65 முழு நேர ரேஷன் கடைகளும், 20 பகுதி நேர கடைகளும் உள்ளன.

இதில் முழு நேர 65 ரேஷன் கடைகளுக்கு கருவிழி பதிவு கருவி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கைரேகை பதிவு விழாதவர்கள் இனி கருவிழி பதிவு செய்து பொருட்கள் வாங்கி கொள்ளலாம். கைரேகை பதிவுக்கு என தனியாக சான்று பெற தேவையில்லை என்றார்.






      Dinamalar
      Follow us