/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விபத்தில் காயமடைந்த போலீஸ் எஸ்.ஐ., பலி
/
விபத்தில் காயமடைந்த போலீஸ் எஸ்.ஐ., பலி
ADDED : ஜூலை 10, 2024 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்,:-ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., டூ-வீலர் விபத்தில் பலியானார்.
தேவிபட்டினத்தில் எஸ்.ஐ., யாக பணிபுரிந்தவர் தென்கரை மகாராஜா, 56. இவர், ஜூன், 29 இரவு பணி முடித்து உறவினர் முருகேசன் டூ--வீலரில் ராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு வந்தார்.
சிதம்பரம்பிள்ளை ஊருணி அருகே எதிரில் டூ-வீலருடன் மோதியதில் துாக்கி வீசப்பட்ட தென்கரை மகாராஜா, முருகேசன் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தென்கரை மகாராஜா நேற்று இறந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.