ADDED : மார் 21, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்:காதலி தற்கொலை செய்ததால் விரக்தியில் காதலனும் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே ஆதனகுறிச்சியை சேர்ந்த பெருமாள் மகன் கவிநாத் 21. டிரைவராக வேலை செய்தார். முதுகுளத்துார் அருகே கிராமத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை காதலித்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பு அந்த பெண் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
விரக்தியில் இருந்த கவிநாத் வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்தார். முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது கவிநாத் இறந்துவிட்டதாக கூறினர். இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி விசாரிக்கிறார்.