/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வி.ஏ.ஓ.,க்கள் தற்செயல் விடுப்பு
/
வி.ஏ.ஓ.,க்கள் தற்செயல் விடுப்பு
ADDED : பிப் 29, 2024 10:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், - ராமநாதபுரம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
வி.ஏ.ஓ.,க்கள் விடுப்பு போராட்டத்தால் அலுவலகங்கள் பூட்டி இருந்தால் ஜாதிச்சான்று, வாரிசு சான்று உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

