/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
/
ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
ADDED : மே 11, 2025 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்; விடுமுறைநாளையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் பல பகுதியில் இருந்து பக்தர்கள் நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினர்.
இதன்பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று தரிசித்தனர்.
பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.