sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஓட்டலில் அரசு பஸ்  நிறுத்துவது கட்டாயம் நேரம் வீணாவதாக  டிரைவர்கள் புலம்பல் பயணிகள் பாதிப்பு

/

ஓட்டலில் அரசு பஸ்  நிறுத்துவது கட்டாயம் நேரம் வீணாவதாக  டிரைவர்கள் புலம்பல் பயணிகள் பாதிப்பு

ஓட்டலில் அரசு பஸ்  நிறுத்துவது கட்டாயம் நேரம் வீணாவதாக  டிரைவர்கள் புலம்பல் பயணிகள் பாதிப்பு

ஓட்டலில் அரசு பஸ்  நிறுத்துவது கட்டாயம் நேரம் வீணாவதாக  டிரைவர்கள் புலம்பல் பயணிகள் பாதிப்பு


ADDED : ஜூன் 04, 2025 12:48 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வருமான நோக்கத்துடன் தொலை துாரம் செல்லும் பஸ்கள் சில ஓட்டல்களில் கட்டாயம் நின்று செல்ல வேண்டும் என அதிகாரிகள் உத்தரவால் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் சிரமப்படுவதாக டிரைவர்கள் புலம்புகின்றனர்.

வெளி மாவட்டங்களுக்கு 3 முதல் 6 மணி நேரம் வரை செல்லும் தொலை துார பஸ்கள் பயணிகள் வசதிக்காக செல்லும் வழித்தடத்தில் உள்ள ஓட்டல்களில் 10 முதல் 15 நிமிடங்கள் நிறுத்தி செல்வது வழக்கமாக உள்ளது.இதன் காரணமாக அரசு பஸ் நிறுத்துவதற்காக சில ஓட்டல்கள் ஒப்பந்த அடிப்படையில் கட்டணமும் செலுத்துகின்றனர்.

இதன் காரணமாக ராமநாதபுரத்தில் இருந்து 110 கி.மீ., செல்லும் துாத்துக்குடி, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அரசு பஸ்களை சில ஓட்டல்களில் கட்டாயம் நின்று செல்ல வேண்டும் என அரசு போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர்.

இதனால் தங்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல முடியவில்லை. நேரம் விரயமாகிறது. மேலும் ஒன்றரை மணி, 2 மணிநேரம் போக்குவரத்திற்கு எதற்காக 15 நிமிடங்கள் வரை பஸ்சை நிறுத்த வேண்டும் என பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

வருமான நோக்கத்தை தவிர்த்து அதிக நேரம் செல்லும் அரசு பஸ்களை மட்டும் அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்தம் செய்துள்ளஓட்டல்களில் நின்று செல்வதற்குபோக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us