ADDED : செப் 13, 2025 03:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் காந்தி நகரை சேர்ந்தவர் கதிரேசன் 42. விவசாய கூலி வேலை செய்து வந்தார். நேற்று மதியம் அருகிலுள்ள உய்ய வந்த அம்மன் பகுதி நகராட்சி குளத்தில் குளிக்க சென்றார்.
அப்போது மயங்கிய நிலையில் நீரில் மூழ்கி பலியானார். எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.