sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கொம்பூதி வயல்களில் பாதிப்பு ஏற்படுத்தும் காட்டு மாடுகள்

/

கொம்பூதி வயல்களில் பாதிப்பு ஏற்படுத்தும் காட்டு மாடுகள்

கொம்பூதி வயல்களில் பாதிப்பு ஏற்படுத்தும் காட்டு மாடுகள்

கொம்பூதி வயல்களில் பாதிப்பு ஏற்படுத்தும் காட்டு மாடுகள்


ADDED : ஜன 22, 2024 04:45 AM

Google News

ADDED : ஜன 22, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகோசமங்கை: -உத்தரகோசமங்கை அருகே கொம்பூதி, கருக்காத்தி, பனையடியேந்தல், மேலமடை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு காட்டு மாடுகள் உள்ளன. 50 முதல் 80 மாடுகள் கூட்டமாக சென்று விவசாயிகள் சாகுபடி செய்த நெல், மிளகாய், மல்லி, பருத்தி உள்ளிட்ட பயிர்களை அழித்து துவம்சம் செய்கிறது.

இதனால் காட்டு மாடுகளை விரட்டுவதற்கு வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது:

ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் திரியும் காட்டு மாடுகள் கொம்பால் முட்டி தாக்குகின்றன.

எனவே விவசாயிகள் இவற்றை விரட்டுவதற்கு சிரமத்தை சந்திக்கின்றனர். காட்டு மாடுகள் தொல்லையில் இருந்து பாதுகாக்க பட்டாசு வெடித்தால் அதற்கு வனத்துறையினர் கட்டுப்பாடு விதிக்கின்றனர்.

காட்டுப்பன்றி மற்றும் மான்களாலும் பாதிப்பை சந்தித்து வருகிறோம். எனவே வனத்துறையினர் விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us