ADDED : பிப் 29, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், -- ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சமூக நலத்துறை சார்பில் மாநில பெண் குழந்தைகள்தினத்தை முன்னிட்டு சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது.
இதில் பங்கேற்ற புதுமடம் அரசுப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் எம்.இருள் கார்த்திகாயினி, கே.முகிலா ஆகியோர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது,மூன்றாவது இடத்தையும்,பந்து எறிதல் போட்டியில் கே.மணிஷாஸ்ரீ, பி.ஹர்சினி இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை யாசிரியர் பாக்கிய லட்சுமி, ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.

