/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு ஊர்வலம்
/
தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 27, 2024 04:54 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் தேசியவாக்காளர் தினவிழா நடந்தது.அரண்மனையில்இருந்து மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணர்வுஊர்வலம் கல்லுாரி வரை நடந்தது.
இதில்,கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்துபேசியதாவது:
வாக்காளர்கள் தங்களுக்கான அடையாளஅட்டையை பெறவேண்டும். 18 வயதான நபர்கள் வாக்காளர்களாக சேர வேண்டும். அனைவரும் கட்டாயம்ஓட்டளிக்க வேண்டும் என்றார். வாக்காளர் உறுதிமொழி எடுத்தனர். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள்வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., கோபு, கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (பொது) பிரபாகர்,கல்லுாரிமுதல்வர் சுமதி, தாசில்தார்கள் முருகேசன், ஸ்ரீதரன் மாணிக்கம் பங்கேற்றனர்.

