sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மது அருந்தும் 'பார் 'ஆக மாறிய ராமேஸ்வரம் நகராட்சி சந்தை

/

மது அருந்தும் 'பார் 'ஆக மாறிய ராமேஸ்வரம் நகராட்சி சந்தை

மது அருந்தும் 'பார் 'ஆக மாறிய ராமேஸ்வரம் நகராட்சி சந்தை

மது அருந்தும் 'பார் 'ஆக மாறிய ராமேஸ்வரம் நகராட்சி சந்தை


ADDED : ஜூன் 01, 2025 11:04 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சி சந்தை வளாகம் மது பிரியர்களின் 'பார்' மாறியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் நகராட்சிக்கு சொந்தமான மீன், காய்கறி விற்கும் சந்தை கட்டடம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை இல்லாவிட்டாலும், தெருவெங்கும் ஏஜன்டுகள் கள்ளத்தனமாக மது விற்பது தாராளமாக உள்ளது.

இதனால் மது பிரியர்கள் இரவு, பகல் பாராமல் நகராட்சி சந்தை வளாகத்திற்குள் அமர்ந்து மது அருந்தும் பாராக மாற்றி உள்ளனர். பின் போதையில் ரகளை செய்து காலி மது பாட்டில்களை சந்தை வளாகத்திற்குள் வீசுகின்றனர்.

இதனால் சந்தை நுழைவு பகுதி கடைகள் முன்பு காலி மதுபாட்டில்கள் உடைந்து சிதறி கிடக்கின்றன. இதனால் பொருள்கள் வாங்க வரும் மக்கள் உடைந்து கிடக்கும் மதுபாட்டில்களை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். இவை பலரது கால்களை பதம் பார்க்கின்றன.

மக்கள் கூடும் நகராட்சி சந்தை பகுதியில் போலீசார் ரோந்து இல்லாததால் குடிமகன்கள் அச்சமின்றி சந்தை வளாகத்தை மது பார் ஆக மாற்றி உலா வருகின்றனர்.

இதை தடுத்து பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த எஸ்.பி., சந்தீஷ் உத்தரவிட வேண்டும்.






      Dinamalar
      Follow us