sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

100 ஏரிகள் புனரமைப்பு; கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.111 கோடி ஒதுக்கீடு

/

100 ஏரிகள் புனரமைப்பு; கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.111 கோடி ஒதுக்கீடு

100 ஏரிகள் புனரமைப்பு; கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.111 கோடி ஒதுக்கீடு

100 ஏரிகள் புனரமைப்பு; கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.111 கோடி ஒதுக்கீடு

1


ADDED : ஜூன் 23, 2025 06:46 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 06:46 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில், 100 ஏரிகளை புனரமைக்க, 111 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு, பிரதமரின் கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், பல்வேறு மாநிலங்களில் உள்ள நீர்நிலைகளை செப்பனிடுதல், புதுப்பித்தல், புனரமைத்தல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இத்திட்டம் ஆர்.ஆர்.ஆர்., என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான நிதியை, மத்திய அரசு 60, மாநில அரசு 40 சதவீதம் பகிர்ந்து கொள்கின்றன.

நீர் நிலைகளின் நீர்பிடிப்பு பகுதிகளை பாதுகாத்தல், அதன் பாசன பகுதிகளை மேம்படுத்துதல், கொள்ளளவை அதிகரித்தல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், வேளாண் தேவைக்கான குடிநீர் இருப்பை உறுதி செய்தல், இத்திட்டத்தின் நோக்கமாகும். ஒன்பது கட்டடங்களாக, 498 கோடி ரூபாய் மதிப்பில், 480 ஏரிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் 100 ஏரிகளை புனரமைக்க, 111 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கி உள்ளது. இந்நிதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 11 ஏரிகள், வறட்சியான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில், 89 ஏரிகள் புனரமைக்கப்பட உள்ளன. இதற்கான அரசாணையை நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us