sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பஸ் ஸ்டாண்ட் அருகே பெயரளவில் உள்ள அம்மா உணவகம்... புத்துயிர் பெறுமா: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவனையிலும் செயல்படவில்லை

/

பஸ் ஸ்டாண்ட் அருகே பெயரளவில் உள்ள அம்மா உணவகம்... புத்துயிர் பெறுமா: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவனையிலும் செயல்படவில்லை

பஸ் ஸ்டாண்ட் அருகே பெயரளவில் உள்ள அம்மா உணவகம்... புத்துயிர் பெறுமா: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவனையிலும் செயல்படவில்லை

பஸ் ஸ்டாண்ட் அருகே பெயரளவில் உள்ள அம்மா உணவகம்... புத்துயிர் பெறுமா: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவனையிலும் செயல்படவில்லை


ADDED : செப் 23, 2025 04:03 AM

Google News

ADDED : செப் 23, 2025 04:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் புது பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள அம்மா உணவகம் இன்றி தரைத்தளம் சேதமடைந்து எலித்தொல்லை உள்ளது. அரசு மருத்துவக்கல்லுாரியில் 8 மாதங்களாக செயல்படவில்லை. உணவகத்தை திறந்து தொடர்ந்து பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெ., ஆட்சியில் 2013 ல் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் மலிவு விலை அம்மா உணவகங்கள் துவங்கப்பட்டது. இதன்படி ராமநாதபுரத்தில் மக்கள் அதிகளவில் கூடும் புது பஸ்ஸ்டாண்ட், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்திற்குள் அம்மா உணவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சாம்பார் இட்லி ரூ.1, தயிர் சாதம் ரூ.3, சாதம் ரூ.5, என குறைந்த விலைக்கு விற்கின்றனர். ஏழை மக்கள் பலர் பயன்பெறுகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஜன.,ல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செயல்பட்ட அம்மா உணவகம் கட்டடம் கூரை பெயர்ந்து விழுததால் மூடப்பட்டது. 8 மாதங்களாக செயல்படவில்லை. தற்போது டி.பி., வார்டு அருகேயுள்ள கட்டடத்தை புதுப்பித்தும் உணவகம் திறக்கப்படாமல் உள்ளது. மேலும் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள அம்மா உணவகம் சமையல் அறையில் தரைத்தளம் சேதமடைந்து மண் குவிந்துள்ளது. எலித்தொல்லையால் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.

பயன்பாடில்லாத மாவு அரைக்கும் இயந்திரங்கள் பல மாதங்களாக அகற்றப்படாமல் குப்பையாகி கிடக்கிறது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் அம்மா உணவகத்தை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உடன் திறக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் உணவகத்தை தரைத்தளத்தை சீரமைத்து, கட்டடத்தை புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அக்., முதல் வாரத்தில் அம்மா உணவகம் பயன்பாட்டிற்கு வந்து விடும். பஸ் ஸ்டாண்ட் உணவகத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.--






      Dinamalar
      Follow us