நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஹார்ட்புல்னெஸ் நிறுவனம் சார்பில் ஜன.22 முதல் 24 வரை பட்டணம்காத்தான் டி-பிளாக் தனியார் மண்டபத்தில் யோகா ம ேஹாத்ஸவம் நடந்தது.
மூன்று நாட்களும் விவேகானந்தர் கேந்திரம் பயிற்சியாளர் செல்வி தியான பயிற்சி அளித்தார். ஹார்ட்புல்னெஸ் நிறுவனம் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் குமார், சுத்தானந்தம், சுரேஷ்பாபு ஆகியோர் யோகா கலை குறித்தும், அதன் பயன் பற்றி விரிவாக பேசினர்.
நிகழ்ச்சியில் வேலுமனோகரன் கலை-அறிவியல் மகளிர் கல்லுாரி தாளாளர் மனோகரன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ஜேக்கப், மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் ராமவன்னி, சக்கர கோட்டை ஊராட்சி தலைவர் யாழினி பங்கேற்றனர்.

