/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
இரவில் மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் சாலை மறியல்
/
இரவில் மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் சாலை மறியல்
இரவில் மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் சாலை மறியல்
இரவில் மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : மே 15, 2025 06:57 PM
அரக்கோணம்,:அரக்கோணத்தில், இரவு முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரத்தில் நள்ளிரவு 11:50 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கோடை வெப்பத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இரவில் மின்சாரமின்றி கடும் அவதிக்கு ஆளாகினர்.
அதிகாலை 5:00 மணி வரை மின் இணைப்பு தரப்படாத நிலையில், ஆத்திரமடைந்த மக்கள், விண்டர்பேட்டை பகுதியில், அ.தி.மு.க., நகர்மன்ற உறுப்பினர் நரசிம்மன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், அதிகாலை, 5:30 மணிக்கு, காஞ்சிபுரம் - திருப்பதி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் அரக்கோணம் டவுன் போலீசார் பேச்சு நடத்தி, அரக்கோணம் மின் அலுவலக ஊழியர்களிடம் பேசி, மின் இணைப்பை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.