sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மகனுக்கு வெளிநாட்டில் வேலை தந்தையிடம் ரூ.15 லட்சம் மோசடி

/

மகனுக்கு வெளிநாட்டில் வேலை தந்தையிடம் ரூ.15 லட்சம் மோசடி

மகனுக்கு வெளிநாட்டில் வேலை தந்தையிடம் ரூ.15 லட்சம் மோசடி

மகனுக்கு வெளிநாட்டில் வேலை தந்தையிடம் ரூ.15 லட்சம் மோசடி


ADDED : ஜன 27, 2024 01:36 AM

Google News

ADDED : ஜன 27, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த மீனவர் கண்ணன், 54, என்பவரின் மகன் ஆப்ரிக்காவில் மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரின் வேலை ஒப்பந்தம் முடிவுக்கு வர உள்ளதால், ஆன்லைன் மூலம் வேறு நாடுகளில், அவரின் தந்தை வேலை தேடினார்.

அப்போது, கனடா நாட்டில் அதிக சம்பளத்துக்கு வேலை இருப்பதாக, ஆன்லைனில் சிலர் பேசினர். வேலை ஒப்பந்த பத்திரம், விசா, பாஸ்போர்ட் அனைத்தும் வீட்டுக்கே நேரடியாக வந்து வழங்கப்படும் என, கண்ணனிடம் அவர்கள் உறுதி அளித்தனர்.

அதை உண்மை என நம்பி, அந்த மர்ம நபர்கள் கேட்ட, 15 லட்சம் ரூபாயை, பல தவணைகளாக வங்கியில் கண்ணன் செலுத்தினார். பணம் சென்றடைந்த நிலையில், மர்ம நபரின் தொடர்பு எண்கள் துண்டிக்கப்பட்டன.

ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்ணன் அளித்த புகார்படி, சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us