sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பசுமை சாலை திட்டத்தில் 300 மரக்கன்றுகள் நடல்

/

பசுமை சாலை திட்டத்தில் 300 மரக்கன்றுகள் நடல்

பசுமை சாலை திட்டத்தில் 300 மரக்கன்றுகள் நடல்

பசுமை சாலை திட்டத்தில் 300 மரக்கன்றுகள் நடல்


ADDED : செப் 11, 2025 01:42 AM

Google News

ADDED : செப் 11, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி :வாழப்பாடி நெடுஞ்சாலை உட்கோட்டம், புத்திரகவுண்டம்பாளையம் - இடையப்பட்டி நெடுஞ்சாலையோரம், கல்லேரிப்பட்டியில், பசுமை சாலைகள் திட்டம் மூலம், வேம்பு, புங்கன், நாவல், பூவரசன் உள்பட, 100 மரக்கன்றுகள் நேற்று நடவு செய்யப்பட்டு, பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டன. முன்னதாக, அயோத்தியாப்பட்டணம் - பேளூர் நெடுஞ்சாலையோரம், 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. வாழப்பாடி உதவி கோட்டப்பொறியாளர் மணிவண்ணன், உதவி பொறியாளர் ராஜேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வாழப்பாடி நெடுஞ்சாலை உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில், 1,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு வாழப்பாடி உட்கோட்ட அலுவலகத்தில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை, 300 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தொடர்ந்து மரக்கன்றுகள் அடுத்தடுத்து நடப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us