sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உதவி மையத்தில் 2 நாளில் 60 மாணவர் விண்ணப்பம்

/

உதவி மையத்தில் 2 நாளில் 60 மாணவர் விண்ணப்பம்

உதவி மையத்தில் 2 நாளில் 60 மாணவர் விண்ணப்பம்

உதவி மையத்தில் 2 நாளில் 60 மாணவர் விண்ணப்பம்


ADDED : மே 10, 2025 01:59 AM

Google News

ADDED : மே 10, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், தமிழகம் முழுதும் அண்ணா பல்கலை சார்பில், பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, மாவட்டம் வாரியாக அரசு பொறியியல் கல்லுாரிகளில் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரியில் நேற்று முன்தினம், உதவி மையம் தொடங்கப்பட்டது.

அங்கு, 30 கணினிகளுடன், தனித்தனியே ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். அவர்கள், விண்ணப்பிக்க வரும் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ் பதிவேற்றம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இரு நாளில், 60 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு கல்லுாரி முதல்வர் விஜயன் பதிவு செய்யப்பட்ட ஒப்புகை சீட்டுகளை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us