/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.15 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு
/
ரூ.15 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு
ADDED : மே 18, 2025 04:33 AM
சேலம்: சேலம், பள்ளப்பட்டி, சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டி வசந்தா, 41. நண்பர் வாயிலாக, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அபுபக்கர், அவரது குடும்பத்தினருடன் கிறிஸ்டி வசந்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
அந்த குடும்பத்தினர் கிறிஸ்டி வசந்தாவிடம், 'மத்திய அரசு உயரதிகாரிகளுடன் பழக்கம் உள்ளதால், அவர்கள் வாயிலாக, மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக துறையில் வேலை வாங்கித் தருவதாகவும், மாதம், 1.50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். அதற்கு, 15 லட்சம் ரூபாய் வரை செலவாகும்' என, தெரிவித்துள்ளனர்.
நம்பிய கிறிஸ்டி வசந்தா, இரு மாதங்களுக்கு முன், 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். வேலை வாங்கித் தராமல், பணத்தை திருப்பிக் கேட்டபோது, மிரட்டல் விடுத்துள்ளனர். கிறிஸ்டி வசந்தா, பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அபுபக்கர், அவரது மகன் சாஜிர், மருமகள் சிஜி மற்றும் அதே குடும்பத்தைச் சேர்ந்த சிக்கர் மீது போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

