sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கழுத்தை நெரித்து மகள் கொலை: தந்தையும், மகனும் தற்கொலை

/

கழுத்தை நெரித்து மகள் கொலை: தந்தையும், மகனும் தற்கொலை

கழுத்தை நெரித்து மகள் கொலை: தந்தையும், மகனும் தற்கொலை

கழுத்தை நெரித்து மகள் கொலை: தந்தையும், மகனும் தற்கொலை


ADDED : ஜன 27, 2024 03:57 PM

Google News

ADDED : ஜன 27, 2024 03:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம : கழுத்தை நெரித்து மகளை கொன்றுவிட்டு தந்தையும் மகனும் தற்கொலை செய்து கொண்டனர்.

இதற்கு கடன் பிரச்னை காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம், மாசிநாயக்கன்பட்டி, இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன், 54. கெமிக்கல் நிறுவனம் நடத்திவந்தார். இவரது மனைவி நிர்மலா, 50. இவர்களது மகன் ரிஷி கேசவன், 30, பி.இ., முடித்துவிட்டு தந்தையுடன் கெமிக்கல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். மகள் பூஜா, 23; பி.காம்., படித்துவிட்டு கோவையில் தங்கி, சி.ஏ., படிப்புக்கு தயாராகி வந்தார். இவர் விடுமுறையில், இந்திரா நகரில் உள்ள வீட்டுக்கு வந்தார்.இந்நிலையில் நேற்று காலை நிர்மலா, அவரது உறவினருக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு, சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார். பின் மாலை, 5:30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது படுக்கையில், பூஜா கழுத்து நெறிபட்டு பிணமாகி கிடந்தார். அதன் அருகே விட்டத்தில் உள்ள இரும்பு கம்பியில் வேட்டி, சேலையில் வெங்கடேஸ்வரனும், ரிஷி கேசவனும் துாக்கில் தொங்கியபடி பிணமாகி கிடந்தனர்.நிர்மலா பார்த்து அலறித்துடித்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, 3 பேரையும் மீட்டு, அருகில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், 3 பேரும் இறந்தது உறுதியானது. அம்மாபேட்டை போலீசார், உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.போலீசார் கூறுகையில், '6 மாதங்களுக்கு முன் தான், இந்திரா நகரில் சொந்த வீடு கட்டி குடி புகுந்துள்ளனர். கடன் பிரச்னை இருந்ததாக, உறவினர்கள் தெரிவித்தனர். அதேநேரம் காதல் விவகாரம் காரணமா என்றும் விசாரிக்கிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us