sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓடை சேதப்படுத்தியதில் தகராறு அ.தி.மு.க., பிரமுகருக்கு வெட்டு

/

ஓடை சேதப்படுத்தியதில் தகராறு அ.தி.மு.க., பிரமுகருக்கு வெட்டு

ஓடை சேதப்படுத்தியதில் தகராறு அ.தி.மு.க., பிரமுகருக்கு வெட்டு

ஓடை சேதப்படுத்தியதில் தகராறு அ.தி.மு.க., பிரமுகருக்கு வெட்டு


ADDED : பிப் 02, 2024 09:54 AM

Google News

ADDED : பிப் 02, 2024 09:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அருகே அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன், 68. அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். அதே பகுதியில் வசிக்கும் முத்துசாமி குடும்பத்தினர், அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, குத்தகை முறையில் விவசாயம் செய்கின்றனர். நேற்று மாலை, 5:00 மணிக்கு, முத்துசாமி, 65, அவரது மகன் பூமாலை, 35, ஆகியோர், அங்குள்ள ஓடை வாய்க்காலை சேதப்படுத்தினர். இதுகுறித்து கணேசன், 68, அவரது மனைவி தமிழ்செல்வி, 48, மைத்துனர் தமிழ்வேந்தன், 52, தட்டிக்கேட்டுள்ளனர்.

இதில் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பூமாலை, முத்துசாமி ஆகியோர், அரிவாளால் வெட்டியதில் கணேசன், தமிழ்செல்வி, தமிழ்வேந்தன் காயம் அடைந்தனர். இதில் கணேசனின் இடது கையில், 3 விரல்கள் துண்டாகி, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மூவரும், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் கணேசன் தரப்பினர் தாக்கியதாக முத்துசாமி, அவரது மகள் வளர்மதி, 34, ஆகியோரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆத்துார் ஊரக போலீசார், இரு தரப்பு புகார்படி

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us