sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மருத்துவமனையில் மாயமான இன்ஜினியர் ஓமலுாரில் மீட்பு

/

மருத்துவமனையில் மாயமான இன்ஜினியர் ஓமலுாரில் மீட்பு

மருத்துவமனையில் மாயமான இன்ஜினியர் ஓமலுாரில் மீட்பு

மருத்துவமனையில் மாயமான இன்ஜினியர் ஓமலுாரில் மீட்பு


ADDED : மே 25, 2025 01:15 AM

Google News

ADDED : மே 25, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், கள்ளக்குறிச்சி, புது உச்சிமேடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம், 39. சிவில் இன்ஜினியரான இவர், இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து அடிபட்டு, கடந்த 11ல், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக்குழுவினர் ஏற்பாடு செய்த நிலையில், 15ல் மாயமானார். அவரது மனைவி சசிகலா புகாரின்படி, மருத்துவமனை போலீசார் தேடினர். அவரது புகைப்படம் உள்ளிட்ட விபரம் அச்சிட்ட துண்டறிக்கை, மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு தேடப்பட்டது.

இதன் எதிரொலியாக நேற்று முன்தினம்

மாலை, 6:00 மணிக்கு ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சண்முகம் இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் மீட்டு விசாரித்தபோது, அதிக மன அழுத்தத்தால், சற்று மனநிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது. பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us