sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பசுமை வனம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு: பனமரத்துப்பட்டி ஏரி புதுப்பொலிவு பெற வாய்ப்பு

/

பசுமை வனம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு: பனமரத்துப்பட்டி ஏரி புதுப்பொலிவு பெற வாய்ப்பு

பசுமை வனம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு: பனமரத்துப்பட்டி ஏரி புதுப்பொலிவு பெற வாய்ப்பு

பசுமை வனம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு: பனமரத்துப்பட்டி ஏரி புதுப்பொலிவு பெற வாய்ப்பு


ADDED : ஜூன் 28, 2025 04:03 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ''பனமரத்துப்பட்டி ஏரியின் ஒரு பகுதியில், 55 ஏக்கரில், 25 கோடி ரூபாயில், நகர்புற பசுமை வனங்கள் அமைக்க நிதி ஒதுக்-கப்பட்டுள்ளது,'' என, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சேலம் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. அதில், தி.மு.க., கவுன்சிலர்கள் பேசியதாவது:

தெய்வலிங்கம்(9வது வார்டு): மாநகராட்சியில் நாய் தொல்லை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன், அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கை, இடையில் நிறுத்தப்-பட்டதால்

கட்டுக்கடங்காமல் அதிகரித்துவிட்டது. இதனால் உரிய நடவ-டிக்கை எடுக்க

வேண்டும்.

கோபால்(58வது வார்டு): அம்பாள் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, நிலத்தடி நீரும் விஷமாக மாறி வருகி-றது. ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். மூணாங்க-ரடு உள்ளிட்ட பகுதிகளில் பல குடியிருப்புகள் மலை மேல் உள்-ளன. அவர்களிடம், பாதாள சாக்கடைக்கு வரி வசூலிக்கப்படுகி-றது. அங்கு சாக்கடை வசதி கூட இல்லை. இதனால் அவர்க-ளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும்.

ராஜ்குமார்(13வது வார்டு): அஸ்தம்பட்டி உழவர் சந்தை முன் ஏராளமான கடைகள் உருவாகிவிட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி நேரத்தில் குழந்தைகள் அவதிக்கு ஆளாகின்-றனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்.

பழனிசாமி(51வது வார்டு): சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகு-தியில் தினமும், 10,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்-கின்றனர். அங்கு கழிப்பறை, நிழற்கூடம் அமைக்க வேண்டும்.

மேயர் ராமச்சந்திரன்: பனமரத்துப்பட்டி ஏரியின் ஒரு பகுதியில், 55 ஏக்கரில், 25 கோடி ரூபாயில், நகர்புற பசுமை வனங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 4 மண்டலங்களிலும் உள்ள, 119 திறந்தவெளி கிணறுகளை புனரமைக்க, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பேசினர்.

கடந்த, 15 ஆண்டுக-ளாக வறண்டுள்ள ஏரியில், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. தற்போது நகர்புற பசுமை வனங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்த ஏரியின் ஒரு பகுதி, புதுப்பொலிவு பெற வாய்ப்பு

ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us