ADDED : மே 28, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், தேக்கம்பட்டியை சேர்ந்த அசோகன் மனைவி கஸ்துாரி, 47. மாமாங்கத்தில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் துாய்மை பணியாளராக வேலை செய்தார். நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது மயங்கி விழுந்தார்.
ஊழியர்கள், ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் அவர் இறந்தது தெரிந்தது. சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.