ADDED : செப் 21, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் :சேலம், பொன்னம்மாபேட்டை, கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி, 36. கூலித்தொழிலாளியான இவருக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, இவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று காலை, அவர், காசி முனியப்பன் கோவில் தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் சடலமாக கிடப்பதாக, டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார்,சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.