நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: அழகப்பா பல்கலை.,யில் உயர் கல்வித் துறை அறிவித்துள்ளபடி குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க.ரவி உறுதிமொழி வாசித்தார்.
பதிவாளர் செந்தில்ராஜன், நிதி அலுவலர் வேதிராஜன் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் துறை பேராசிரியர்கள் மற்றும் உறுப்புக் கல்லுாரி பேராசிரியர்கள் முதல்வர்கள் உள்ளிட்ட பலர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.