/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
4,000 ஏக்கரில் பசுந்தாள் உர பயிர் சாகுபடி 50 சதவீத மானியத்தில் விதை
/
4,000 ஏக்கரில் பசுந்தாள் உர பயிர் சாகுபடி 50 சதவீத மானியத்தில் விதை
4,000 ஏக்கரில் பசுந்தாள் உர பயிர் சாகுபடி 50 சதவீத மானியத்தில் விதை
4,000 ஏக்கரில் பசுந்தாள் உர பயிர் சாகுபடி 50 சதவீத மானியத்தில் விதை
ADDED : ஜூன் 07, 2024 05:16 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 4 ஆயிரம் ஏக்கரில் பசுந்தாள் உர பயிர் சாகுபடி செய்ய அரசு மானியம் வழங்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) லட்சுமி பிரபா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தற்போதுள்ள தொழில்முறை வேளாண்மையில் ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்வதால், மண்ணில் உள்ள சத்துக்கள் குறைந்து மண்வளம் பாதிக்கப்படுகிறது.
அதிக அளவு ரசாயன உரமிடுவதால் நிலம் பாழ்பட்டு அதிகளவில் களர், உவர் நிலங்களாக மாறியுள்ளன. எனவே மண் வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உரப்பயிர் சாகுபடிக்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பசுந்தாள் உயிர் உரம் பயிரிடுவதன் மூலம் மண்ணில் உள்ள உயிர்ம கரும சத்தினையும், பயிர் மகசூலையும் அதிகரிக்க செய்யலாம். அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். பாசன விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்யலாம்.
சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை தரப்படும். ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதை தரப்படும். இதற்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.1,000 மானியம் வழங்கப்படும். விதைத்த 40 முதல் 45 நாட்களுக்கு பின் மடக்கி உழவு செய்ய வேண்டும். இம்மாவட்டத்தில் 4,000 ஏக்கரில் பசுந்தாள் உயிர் உர பயிர் நடவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
தக்கைப்பூண்டு, சணப்புகொளஞ்சி, மணிலா அகத்தி ஆகிய பசுந்தாள் உர பயிர்களாகும். இவை காற்றில் உள்ள நைட்ரஜனை கிரகித்து வேர் முடிச்சு வாயிலாக நிலத்தில் தழைச்சத்தை சேர்க்கிறது.
மண்ணின் உயிர்ம கரும தன்மையை அதிகரிக்கிறது. மண்ணில் கட்டமைப்பு மாறி நல்ல காற்றோட்டம் ஏற்படும். மண் இறுக்கம் மாறும். இதற்கான விதைகளை 50 சதவீத மானியத்தில் அந்தந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெறலாம்.