ADDED : ஜூலை 25, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி ஐந்து விளக்கில் மத்திய அரசு கொண்டு வந்த, 3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் ஜி.ராஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர் ராமச்சந்திரன், தேதியக்குழு உறுப்பினர் மீனாள், கட்டட சங்க மாநில குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.