
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: மடப்புரம் கண்மாய்கரை செங்கடி அம்மன் கோயில் பால்குட விழா நடந்தது. வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின் அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை மடப்புரம் நாட்டாமை சஞ்சீவி, அறங்காவலர் குழு தலைவர் முருகன், கட்டட தொழிலாளர் சங்க தலைவர் முருகன் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.