sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடியில் புதிய சந்தை திறப்பு

/

காரைக்குடியில் புதிய சந்தை திறப்பு

காரைக்குடியில் புதிய சந்தை திறப்பு

காரைக்குடியில் புதிய சந்தை திறப்பு


ADDED : ஜூலை 25, 2024 04:34 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 04:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி சந்தைப்பேட்டையில் ரூ.1.50 கோடி செலவில் புதிய சந்தை கட்டட திறப்பு விழா நடந்தது.

காரைக்குடி கணேசபுரம் சந்தைப்பேட்டையில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 6.74 ஏக்கர் பரப்பளவில் வாரச்சந்தை அமைந்துள்ளது. இங்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 90 கடைகளுடன் கூடிய புதிய சந்தை கட்டடம் கட்டும் பணி 2022ம் ஆண்டு தொடங்கியது.

2 ஆண்டுகளாக நடந்த சந்தை கட்டட பணி முடிவடைந்த நிலையில் நேற்று திறப்பு விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் மாங்குடி எம்.எல்.ஏ., சேர்மன் முத்துத்துரை , கோட்டாட்சியர் பால்துரை, சிவகங்கை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் புவனேஸ்வரி, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனி குமார், செயல் அலுவலர் மகேந்திர பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச்சந்தையில் வியாபாரிகளின் பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட கழிப்பிடம் பயன்பாடின்றி வீணாகி கிடக்கிறது. செப்டிக் டேங்க் மூடப்படாமல் கிடப்பதால் அபாயம் நிலவுகிறது. கழிப்பிட வசதி இல்லாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர். தற்போது புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில் கழிப்பிட வசதி செய்து தரப்படும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் கழிப்பிட வசதி குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.

பழைய கழிப்பிடமும் பராமரிக்கப்படவில்லை. புதிதாக கட்டப்பட்ட சந்தை கட்டடம், செயல்பாட்டிற்கு வரும் முன்பே ஆங்காங்கே குழி விழுந்தும், உடைந்தும் சேதமடைந்து கிடக்கிறது. தவிர அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்குபெற்ற நிகழ்ச்சியில் புதிய கட்டடத்தை சுற்றிலும் குப்பை கழிவு மற்றும் இடிபாடு மணல் கொட்டப்பட்டு மேடாக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசியது.






      Dinamalar
      Follow us