/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.66 லட்சம் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.66 லட்சம் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.66 லட்சம் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.66 லட்சம் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்
ADDED : ஜூலை 31, 2024 06:18 AM

சிவகங்கை : சிவகங்கை மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் 71 பயனாளிகளுக்கு ரூ.66 லட்சம் மதிப்பிலான நலத் திட்டங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உபகரணம் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் வரவேற்றார். சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, சிவகங்கை நகராட்சி தலைவர் துரை ஆனந்த், துணை தலைவர் கார்கண்ணன், காஞ்சிரங்கால் ஊராட்சி தலைவர் மணிமுத்து, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சரஸ்வதி, மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தாராணி, நகராட்சி கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், தி.மு.க., வழக்கறிஞர் அணி ராஜா அமுதன், மாற்றுத்திறனாளிகள் மாநில நலக்குழு உறுப்பினர் புஷ்பராஜ் உட்பட அலுவலர்கள், ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
விபத்து நிவாரண உதவித்தொகை, நவீன செயற்கை கால், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் என 71 பயனாளிகளுக்கு ரூ.66 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.