sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சாலையோர வியாபாரிகளிடம் வசூல்

/

சாலையோர வியாபாரிகளிடம் வசூல்

சாலையோர வியாபாரிகளிடம் வசூல்

சாலையோர வியாபாரிகளிடம் வசூல்


ADDED : மார் 21, 2025 05:55 AM

Google News

ADDED : மார் 21, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடியில் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை யொட்டி அமைக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததால் வியாபாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.

காரைக்குடி மாநகராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் உள்ளன. காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில், பால்குட திருவிழாவையொட்டி நகரின் பெரும்பாலான இடங்களில் தற்காலிக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சாதாரண நாட்களில், தள்ளு வண்டிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25 கட்டணம் வசூல் செய்ய வேண்டும். பிற சாலையோர கடைகளுக்கு 1 முதல் 10 சதுர அடி வரை ரூ.20ம், 15 சதுர அடிக்கு ரூ.25ம், 20 சதுர அடி வரை ரூ.30 மட்டுமே வசூல் செய்ய வேண்டும்.

பண்டிகை நாட்களில் இரு மடங்கு வசூலித்துக் கொள்ளலாம். ஆனால் பாசி, ஊசி விற்கும் சிறு வியாபாரிகள் உட்பட பலரிடமும் ரூ. 200 முதல் ரூ. 500 வரை கட்டாய வசூல் செய்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கமிஷனர் சித்ரா கூறுகையில், சதுர அடிக்கு எவ்வளவு என்று குறிப்பிடப்பட்டுள்ளதோ அதைதான் வசூல் செய்ய வேண்டும். கூடுதலாக வசூல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us