sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நெல் சாகுபடி தாமதம்: இயந்திர அறுவடையும் காரணம் விவசாயிகள் கருத்து

/

நெல் சாகுபடி தாமதம்: இயந்திர அறுவடையும் காரணம் விவசாயிகள் கருத்து

நெல் சாகுபடி தாமதம்: இயந்திர அறுவடையும் காரணம் விவசாயிகள் கருத்து

நெல் சாகுபடி தாமதம்: இயந்திர அறுவடையும் காரணம் விவசாயிகள் கருத்து


ADDED : செப் 13, 2025 11:38 PM

Google News

ADDED : செப் 13, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துாரில் இயந்திர அறுவடைக்கு வசதியாக வும் நெல்சாகுபடியை தாமதமாக விவசாயிகள் துவக்குகின்றனர்.

திருப்புத்துார் பகுதியில் தாமதமான பருவமழையால் ஆடிப்பட்டம் தவறி, ஆவணி, புரட்டாசியில் தாமதமாக விதைப்பதற்கு முக்கிய காரணம் இயந்திர அறுவடை தான் காரணம் என்கின்றனர். தற்போது குறுவை கால பயிராக நெல்சாகுபடியில் 3 மாதத்தில் அறுவடை செய்ய வேண்டியுள்ளது.

முன்பெல்லாம் தைக்கு முன்பாக மழை காலத்திலேயே விவசாயிகள் கதிரை அறுவடை செய்வது வழக்கம். தற்போது பணியாளர் தட்டுப்பாட்டால் அறுவடை இயந்திரங்களே பயன்படுத்தப்படுகிறது.

வயல்களில் சகதியாக இருந்தால் இயந்திரங்கள் சிக்கி அறுவடை செய்வது கடினம் என்பதால் தை மாதத்திற்கு பின்னர் மழை நின்ற பின் அறுவடை செய்வது எளிதாக இருக்கும் என்று பல விவசாயிகள் தாமதமாக விதைப்பதையும், நாற்று நடுவதையும் வழக்கமாக்கி விட்டனர்.

மேலும், முன்பெல்லாம் மழை பெய்யாவிட்டாலும், கண்மாய் பாசனத்தை நம்பாமல். கிணறு,போர்வெல் வசதி உள்ளவர்கள் நெல்சாகு படியை ஆடிப்பட்டத்தில் துவக்குவதுண்டு. அவர்களும் அறுவடைக்காக மட்டுமின்றி மாடுகளின் தொல்லையாலும் தாமத மாக நடவு பணியை துவக்குகின்றனர்.

தற்போது கிராமங் களிலும் மாடுகள் கட்டிபோடாமல் அவிழ்த்து விடப்படுவதால் வயல்களில் நடவு செய்தால் மாடுகள் மேயும் அபாயம் அதிகம். பரவலாக, பலரும் சாகுபடி செய்தால் தான் மாடுகளை வயல்களில் மேயாமல் பாதுகாக்க அனைவரும் முறை வைத்து செயல்பட முடியும் என்பதால் அவர்களும் தாமதமாக விவசாய பணிகளை துவக்குகின்றனர்.






      Dinamalar
      Follow us