sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கீழடி அருங்காட்சியகத்தில் உலைகலன் பார்வையாளர்கள் வரவேற்பு

/

கீழடி அருங்காட்சியகத்தில் உலைகலன் பார்வையாளர்கள் வரவேற்பு

கீழடி அருங்காட்சியகத்தில் உலைகலன் பார்வையாளர்கள் வரவேற்பு

கீழடி அருங்காட்சியகத்தில் உலைகலன் பார்வையாளர்கள் வரவேற்பு


ADDED : பிப் 01, 2024 11:15 PM

Google News

ADDED : பிப் 01, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி- கீழடி அருங்காட்சியகத்தில் உலைகலன் மாதிரியை வடிவமைக்கும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கீழடியில் மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் கடந்த 2015ல் வைகை ஆற்றங்கரை நாகரீகத்தை கண்டறியும் பொருட்டு தொடங்கப்பட்ட அகழாய்வில் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் வாழ்ந்த வாழ்விடங்கள், விவசாயம், நெசவு தொழில் உள்ளிட்டவற்றிற்கான ஆதாரங்கள் கிடைத்தன. அதன்பின் தமிழக தொல்லியல் துறை இதுவரை ஆறு கட்ட அகழாய்வை நடத்தி முடித்துள்ளது.

அகழாய்வில் கிடைத்த பொருட்களை கொண்டு கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு அதில் 13 ஆயிரத்து 608 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் அகழாய்வு தளங்கள், வராஹி உருவம் பதித்த சூதுபவளம்,சுடுமண் பானைகள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளின் மாதிரிகள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்திற்கு பயன்படும் அரிவாள், மண்வெட்டி, களைவெட்டி உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பு அதிகம் உள்ளன.

2600 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியிலும் ஆயுதங்கள், கருவிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமாக 5ம் கட்ட அகழாய்வின் போது மணலுாரிலும், கீழடியிலும் உலைகலன் கண்டறியப்பட்டது.

அருங்காட்சியகத்தில் உலைகலன் பயன்பாடு குறித்த அனிமேஷன் படங்களும் ஒளிபரப்பப்படுகின்றன.

இதனை கண்ட சுற்றுலா பயணிகள் பண்டைய கால உலைகலனை காண ஆர்வம் காட்டியதை அடுத்து தொல்லியல் துறையினர் உலைகலனை காட்சிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கல்மண்டபம் எதிரே மாதிரி உலைகலன் வடிவமைக்கப்பட்டு பார்வையாளர்கள் காண வசதியாக கண்ணாடி கூண்டும் அமைக்கப்பட உள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் பணிகள் நிறைவடைந்து பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us