நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை- தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற தெ. புதுக்கோட்டை எம். கே.என்.நடுநிலைப்பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடக்கிறது. கடந்த பிப்.3ம் தேதி நடைபெற்ற இத்தேர்வின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் தெ. புதுக்கோட்டை
எம். கே. என். நடுநிலைப்பள்ளி மாணவி
குணஸ்ரீ தேர்ச்சி பெற்றார்.இவரை தாளாளர் அன்பழகன் பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கினார்.தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் ரூ 5. ஆயிரம் வழங்கினார்.

