ADDED : ஜன 28, 2024 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, :  குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி  சின்ன குன்றக்குடியில் மஞ்சுவிரட்டு நடந்தது.
குன்றக்குடி பொன்னம்பல அடிகள், ஆர்.டி.ஓ., பால்துரை மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தனர். இதில் சிவகங்கை புதுக்கோட்டை மதுரை. ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  300க்கும் மேற்பட்ட கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து 150 மாடுகள் தொழுவில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.  இதில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

