sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் செப்.,22 நவராத்திரி விழா துவக்கம்

/

ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் செப்.,22 நவராத்திரி விழா துவக்கம்

ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் செப்.,22 நவராத்திரி விழா துவக்கம்

ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் செப்.,22 நவராத்திரி விழா துவக்கம்


ADDED : செப் 15, 2025 05:39 AM

Google News

ADDED : செப் 15, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் செப்.,22 ல் காப்பு கட்டுடன் நவராத்திரி விழா துவங்கி அக்.,2ல் நிறைவு பெறுகிறது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழைய அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில், செப்.,22 அன்று மாலை 5:00 மணிக்கு காப்பு கட்டுடன் நவராத்திரி விழா துவங்குகிறது. தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமை வகிக்கிறார். அன்றைய தினமும் மாலை 6:00 மணிக்கு ராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருள்வார்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு தினமும் அம்மன் ராஜாங்கம், கன்யாகுமரி, சிவபூஜை, அன்னபூரணி, மீனாட்சி, கருமாரி அம்மன், லட்சுமி, மகிஷாசுரமர்த்தினி, சரஸ்வதி, ராஜராஜேஸ்வரி அம்மன் ஆகிய அலங்காரங்களில் எழுந்தருள்வார்.

செப்.,24 முதல் 25 வரை லட்சார்ச்னை, செப்.,26 ல் திருவிளக்கு பூஜை நடைபெறும். விழாவை முன்னிட்டு மாநில அளவில் இறகு பந்து, கபடி உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெறும். தினமும் இரவு 7:00 மணிக்கு பல்வேறு பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.






      Dinamalar
      Follow us