sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விதிகளை மீறும் இறைச்சி கடைகள் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

/

விதிகளை மீறும் இறைச்சி கடைகள் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

விதிகளை மீறும் இறைச்சி கடைகள் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

விதிகளை மீறும் இறைச்சி கடைகள் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்


ADDED : மார் 18, 2025 06:06 AM

Google News

ADDED : மார் 18, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனத்தில் விதிகளை மீறி இயங்கி வரும் இறைச்சி கடைகள் மீது அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் நோய் தொற்று அபாயம் உள்ளது.

திருப்புவனத்தில் 50க்கும் மேற்பட்ட ஆடு, கோழி, மீன் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இறைச்சி கடைகளின் தரை, சுவர் எளிதில் சுத்தம் செய்யும்படி வழுவழுப்பான தரையாக இருக்க வேண்டும், கடைகளில் ரத்த கறை இருக்க கூடாது, ஈக்கள், கொசுக்கள் மொய்க்காமல் இருக்க வலை அமைப்பை ஏற்படுத்த வேண்டும், பொதுமக்கள் முன்னிலையில் ஆடு, கோழிகளை வெட்ட கூடாது, இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகளுக்கு உரிய சான்று பெற வேண்டும், இறைச்சி கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும், இறைச்சி கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சான்று பெற்றிருக்க வேண்டும் என 10க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.

எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி சுகாதாரமற்ற முறையில் செயல்படும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதே கிடையாது.

இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்ட நாட்களிலும் திருப்புவனத்தில் இறைச்சி கடைகள் செயல்படுவது வாடிக்கையாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் இறைச்சி கடைகளில் சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us