sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோடை துவங்கியும் விற்பனைக்கு வராத பதனீர்

/

கோடை துவங்கியும் விற்பனைக்கு வராத பதனீர்

கோடை துவங்கியும் விற்பனைக்கு வராத பதனீர்

கோடை துவங்கியும் விற்பனைக்கு வராத பதனீர்


ADDED : மார் 21, 2025 05:54 AM

Google News

ADDED : மார் 21, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் ஏப்ரலில் தொடங்கி ஜூன் வரை வெயிலின் தாக்கம் இருக்கும்.கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் இளநீர், பழச்சாறு, குளிர்பானங்கள், சர்பத் உள்ளிட்டவைகளை அருந்துவது வழக்கம்.

பதனீர் இந்த கோடை காலத்தில் அதிகமாக விற்பனை செய்யப்படுவது வழக்கம். மார்ச் தொடங்கி மூன்று மாத காலத்திற்கு பதனீர் விற்பனை செய்யப்படும் திருப்புவனம் வட்டாரத்தில் பனை மரங்கள் அவ்வளவாக இல்லாத நிலையில் வெளியூர்களில் இருந்து பதனீர் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஒரு லிட்டர் கடந்தாண்டு 100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.

இந்தாண்டு கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. ஆனால் இது வரை திருப்புவனம் வட்டாரத்தில் பதனீர் விற்பனை செய்யப்படவே இல்லை. காரணம் போதிய அளவு பதனீர் கிடைக்கவில்லை. பல இடங்களில் பனை மரங்கள் வெட்டப்பட்டதால் பதனீர் கிடைக்கவே இல்லை.

பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்புவனத்தில் பதனீர் விற்பனை செய்யப்படும். இந்தாண்டு இதுவரை பதனீர் விற்பனை தொடங்கப்படவே இல்லை.






      Dinamalar
      Follow us