ADDED : ஜன 27, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, : சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் பழுதானதால் காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் காத்திருந்தனர்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. நேற்று அதிகாலை 5:45 மணிக்கு காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது ரயில் இன்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனால் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. நான்கு நாள் விடுமுறை என்பதால் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
2 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் இன்ஜின் சரி செய்யப்படாததால் பயணிகள் கூச்சலிட்டதோடு சிரமம் அடைந்தனர். மானாமதுரையில் இருந்து ஓகா எக்ஸ்பிரஸ் இன்ஜின் வரவழைக்கப்பட்டு மீண்டும் ரயிலை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

