sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கால்நடை பட்டிகள் மூலம் ஆக்கிரமிக்கப்படும் கண்மாய்

/

கால்நடை பட்டிகள் மூலம் ஆக்கிரமிக்கப்படும் கண்மாய்

கால்நடை பட்டிகள் மூலம் ஆக்கிரமிக்கப்படும் கண்மாய்

கால்நடை பட்டிகள் மூலம் ஆக்கிரமிக்கப்படும் கண்மாய்


ADDED : ஜூன் 05, 2025 01:18 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பாசனக் கண்மாய்களில் கால்நடை பட்டிகள் அமைத்து ஆக்கிரமிப்பாளர்கள் கட்டுமானங்களை எழுப்பி வருகின்றனர்.

இத்தாலுகாவில் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஜமீன் கண்மாய் நிர்வாகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கண்மாய்கள் உள்ளன. பெரும்பாலான கண்மாய்களின் தண்ணீரைக் கொண்டு அப்பகுதியில் பாசனம் நடைபெறுகிறது. சிறிய கண்மாய்கள், குளங்கள் நிலத்தடி நீரராதாரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் சில கண்மாய்களை ஆக்கிரமிப்பாளர்கள் நூதன முறையில் ஆக்கிரமித்து வருகின்றனர். முதலில் கண்மாய்க்குள் ஆடு, மாடுகளை கட்டுவதும், பிறகு குடிசை போடுவதும் அதற்கு பிறகு கட்டடங்களை எழுப்பி வருகின்றனர். இதை பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால் கண்மாய்களில் தண்ணீர் தேங்கும் பரப்பு குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே அனைத்து கண்மாய்களையும் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us